< Back
மாநில செய்திகள்
மதுரை, கோவை, ஓசூர், திருப்பூரில் நகர வளர்ச்சி குழுமங்கள் - தமிழக அரசு அரசாணை
மாநில செய்திகள்

மதுரை, கோவை, ஓசூர், திருப்பூரில் நகர வளர்ச்சி குழுமங்கள் - தமிழக அரசு அரசாணை

தினத்தந்தி
|
11 Jun 2022 12:02 PM GMT

வீட்டுவசதித்துறையில் மதுரை, கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்திட, நகர வளர்ச்சி குழுமங்களை அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சம் பேர் வசிக்கும் மதுரை, கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும் அங்கு தேவையான பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு அதிகாரி என்ற பணி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்