< Back
மாநில செய்திகள்
திருமணமாகாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

திருமணமாகாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 Sep 2023 7:15 PM GMT

திருமணமாகாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள மங்களம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் ஆதிமூலம்(வயது 38). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் தூங்கச்சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்