< Back
மாநில செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய  போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி

தினத்தந்தி
|
16 Jun 2023 6:21 PM GMT

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இலவச பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) தீயணைப்பு மீட்புத்துறை நிலைய அலுவலர் 129 பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பணிக்காலியிடம் மற்றும் தேர்விற்கு https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கடந்த 12-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

மாதிரி தேர்வு வினாத்தாள்

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04324 -223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து போட்டி தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

ஊக்க உரைகள்

அரசு போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பகல் 7 மணி முதல் 9 மணி வரையும் இதன் மறுஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இதனை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்