< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பல்வலி தாங்கமுடியாமல் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|14 Dec 2022 9:24 PM GMT
தற்கொலை
ஈரோடு ரங்கம்பாளையம் இரட்டைபாளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). தொழிலாளி. இவர் பல்வலி காரணமாக மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த பெரியசாமி சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.