< Back
மாநில செய்திகள்
மகள் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை
மாநில செய்திகள்

மகள் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
17 Jan 2023 6:46 PM GMT

மகள் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை.

திரு.வி.க. நகர்,

சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவை சேர்ந்தவர் மேரி பிரேமா (வயது 52). இவருடைய கணவர், கடந்த 9 வருடங்களுக்கு முன்பு புற்று நோயால் இறந்து விட்டார். என்ஜினீயரிங் படித்து வந்த தனது மகள் ஹெலன் (23) உடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ஹெலன், கடந்த 8-ந்தேதி அவரது பிறந்த நாள் அன்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் ஹெலன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியாத நிலையில் மேரி பிரேமா, கடும் மன உளைச்சலில் இருந்தார். மகள் இறந்ததற்கான காரணம் தெரிந்து கொள்ள நானும் மேல் உலகம் செல்வேன் என அடிக்கடி அக்கம் பக்கத்தினரிடம் மேரி பிரேமா கூறி வந்தார். அவருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மேரி பிரேமா, தனது மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பிரேமா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்