< Back
மாநில செய்திகள்
இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை காதலித்ததால் விபரீதம் - 3 பேரும் விஷம் குடித்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை காதலித்ததால் விபரீதம் - 3 பேரும் விஷம் குடித்தனர்

தினத்தந்தி
|
7 Jun 2023 9:34 AM GMT

திருவாலங்காடு அருகே இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை காதலித்தனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 பேரும் விஷம் குடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளனர். இவர்கள் இருவரும் உறவினரான மகேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகேஷ் ஐ.டி.ஐ படித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர்களின் காதல் விவகாரம் இரு விட்டார்களுக்கும் தெரிந்த வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் நிறைவேறாத விரக்தியில் நேற்று 3 பேரும் கொசஸ்தலையாறு அருகே சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இரட்டை சகோதரிகளில் ஒருவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் காதலன் இரட்டை சகோதரிகளுடம் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்