< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
செல்போன் செயலி குறித்த பயிற்சி
|8 March 2023 6:43 PM GMT
செல்போன் செயலி குறித்த பயிற்சி நடந்தது.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் 2022-23-ம் கல்வி ஆண்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பார்வை செல்போன் செயலி பயன்பாடு குறித்த பயிற்சி அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சிறப்புரை ஆற்றினர். இதில், சென்னையை சேர்ந்த மாநில கருத்தாளர்கள் 9 பேர் பள்ளி பார்வை கைபேசி செயலி பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள், உதவித்திட்ட அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.