< Back
மாநில செய்திகள்
உடைகல்லுடன் லாரி பறிமுதல்
மதுரை
மாநில செய்திகள்

உடைகல்லுடன் லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
16 Oct 2022 8:14 PM GMT

உடைகல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி பாலமேடு சாலையில் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் மற்றும் கிராம உதவியாளர்கள் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் உடைகல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதில் 3 யூனிட் உடைகல் இருந்தது. இது சம்பந்தமாக கிராமநிர்வாக அதிகாரி ஜெயராஜ் கொடுத்து புகாரின்படி வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து உடைகல்லுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்