< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயற்சி - 3 பேருக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயற்சி - 3 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
7 Aug 2022 8:03 AM GMT

மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை கேட்டுள்ளனர். டிரைவர் தர மறுத்ததால் கத்தியால் அவரை லேசாக வெட்டிவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து டிரைவர் பாலாஜி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு 3 பேரை வலைவீசி ேதடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்