< Back
மாநில செய்திகள்
நூலகத்தின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

நூலகத்தின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
16 July 2023 6:22 PM GMT

நூலகத்தின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

தோகைமலை அருகே உள்ள நெய்தலூர் கிளை நூலகத்தில் மாணவ-மாணவிகளுக்கு நூலகத்தின் பயன்பாடுகள் மற்றும் வாசிப்புதிறன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு குளித்தலை வட்டார நூலகர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நூலகர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.

இதில் திருச்சி கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, பள்ளியின் தொடக்க காலம் முதலே ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் புத்தகங்களை வாசித்து வருவது அவசியமாகும். செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் வாழ்க்கை கேள்வி குறியாக மாறி உள்ளது.

இதனால் ஊர்ப்புற நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை படித்து வாசிப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும் என எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நெய்தலூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்