< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
4 Aug 2022 5:26 PM GMT

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே சவுந்தரவல்லிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த கள ஆய்வு மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் தமிழ் ஆசிரியர் இளையராஜா, முதுகலை ஆசிரியர் சத்தியவதி ஆகியோர் மாணவர்களை அதே பகுதியில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, வாழை, வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் நெற்பயிர் வயலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவர்களிடம், இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யப்படுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்