< Back
மாநில செய்திகள்
தென்னை மரத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

தென்னை மரத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
22 May 2022 6:27 PM GMT

தென்னை மரத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி நடந்தது.

தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையம் சார்பாக தென்னை மரத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. இதற்கு கரூர் வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்திய வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி திரவியம், பொள்ளாச்சி ஆழியார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தென்னையில் மரத்தில் ஏற்படும் பூச்சு தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பயிற்சி மற்றும் ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்