< Back
மாநில செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
25 Aug 2022 6:14 PM GMT

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி கூறி அனைவருக்கும் கையேடுகளை வழங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் குறிஞ்சி தேவி பேசுகையில், மாணவர்களின் தொடர்ச்சியான வருகையை கவனித்தல். இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளியின் வளர்ச்சியில் பங்கு பெறுவது, சுற்றுப்புற சுகாதாரம், போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் கவனித்தல், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கி கூறினார். பின்னர் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் பள்ளியின் உதவி ஆசிரியர் வானதி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், மலர்க்கொடி ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்