< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
4 July 2022 8:26 PM GMT

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சிபெருமாள்நத்தம் ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் சாத்தம்பாடி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் ஆகியோருக்கு வாக்குச்சாவடியை தயார் செய்தல், வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஆவணங்கள் பராமரிப்பு, வாக்குப்பெட்டி பாதுகாப்பு, வாக்குச்சாவடி முகவர்களுக்கான உரிமைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் அளித்தார். தேர்தல் உதவியாளர் அபிமன்யு பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

மேலும் செய்திகள்