< Back
மாநில செய்திகள்
பேரிடர் கால மீட்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

பேரிடர் கால மீட்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி

தினத்தந்தி
|
7 Oct 2022 7:17 PM GMT

பேரிடர் கால மீட்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உடையார்பாளையம்:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி, ஆயுதப்படை துணை சூப்பிரண்டு மணவாளன் மேற்பார்வையில், ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் 60 பேருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் முதல் நாளில் பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்றவற்றில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கமாக அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கமாண்டர் பிரிவை சேர்ந்த குழுவினர், பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்