< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடத்துவது குறித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடத்துவது குறித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
16 July 2022 6:49 PM GMT

செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடத்துவது குறித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அரியலூர் மாவட்டங்களில் பிரபலப்படுத்தும் வகையில் செஸ் போட்டிகள், விழிப்புணர்வு ஊர்வலம், மாரத்தான், இருசக்கர வாகன ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவில் முகாம் நடத்தி அம்மாணவர்களை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க போட்டிகளை நடத்தும் வகையில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பினை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி (அரியலூர்), ஜோதிமணி (உடையார்பாளையம்), பேபி (செந்துறை) ஆகியோர் கலந்து கொண்டவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர். மேலும், இப்பயிற்சி வகுப்பில் செஸ் விளையாட்டு பயிற்றுனர் கலந்து கொண்டு செஸ் விளையாட்டு குறித்தும், விதிமுறைகள், நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பயிற்சியில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்