< Back
மாநில செய்திகள்
கருத்தாளர்களுக்கு பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

கருத்தாளர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
10 April 2023 6:53 PM GMT

கருத்தாளர்களுக்கான 3 நாள் பயிற்சி நடைபெற்றது.


விருதுநகரில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 3 நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர் வெள்ளத்துரை பேசினார். அப்போது ஏற்கனவே 2022-2023-ம் ஆண்டில் 1 வருட காலம் குறிப்பிடத்தக்க திறனுடையவை பெற்றுள்ளதென்றும், மேம்படுத்தப்பட்ட பயிற்சி தேவைப்படும் நிலையில் தற்போது பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்