< Back
மாநில செய்திகள்
கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
3 March 2023 7:32 PM GMT

கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பார்வையிட்டு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பள்ளிக்கல்வி துறையின் மூலம் செல்போன் செயலி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த செயலியில் பள்ளி பார்வையை பதிவிடுதல் தொடர்பான கல்வித்துறை அலுவலர்களுக்கான பயிற்சி பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்து பயிற்சியின் அவசியத்தை எடுத்து கூறினார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மயில்வாகனன் ஆகியோர் கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கல்வித்துறை அலுவலர்கள் 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் (மேல்நிலை) ஜெய்சங்கர் நன்றி கூறினார். பயிற்சிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்