< Back
மாநில செய்திகள்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
7 July 2022 5:34 PM GMT

கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியில் வேலைக்கான அட்டை வழங்குதல், பணியாளர்களுக்கான ஊதியம் குறித்த புகார்களை தீர்த்து வைத்தல், பணி கோரும் நபர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனவும், நலிவுற்றகுடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பணி வழங்குதல், புதிய நபர்களை பதிவு செய்து அதற்கான வேலை அட்டை வழங்குதல், பணித்தளத்தில் வேலை ஒதுக்கீடு செய்வது என்பன உள்பட பல்வேறு பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்