< Back
மாநில செய்திகள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சி

தினத்தந்தி
|
25 Jun 2023 9:00 PM GMT

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சி மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சி மேற்கொண்டனர்.

அணையில் பயிற்சி

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பள்ளி அதிகாரி அஜய் பரதன் உத்தரவின்பேரில் கமாண்டர் ராஜேஷ்குமார், துணை கமாண்டர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 8 பயிற்ச்சியாளர்கள் இணைந்து 60 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை அளித்தனர்.

செயல்விளக்கம்

குறிப்பாக நிலநடுக்கம், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் டிரம், கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மையப்பகுதிக்கு சென்று, அங்கு தண்ணீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு வருவவது போன்று தத்ரூபமாக செயல்விளக்கம் மூலம் பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்