< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு பயிற்சி
|7 Jan 2023 6:45 PM GMT
ஆசிரியர்களுக்கு பயிற்சி
வேதாரண்யம் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் 125 பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல் 3 வகுப்புகளை கையாளும் 170 ஆசிரியர்களுக்கு பயிற்சி வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், ஆசிரிய பயிற்றுனர் அருள்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜர் கலந்து கொண்டு பேசினார்.