< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பழனியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
|12 Oct 2022 6:45 PM GMT
பழனியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பழனி வட்டார அளவில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் பழனியில் நடைபெற்றது. சண்முகபுரம் நகராட்சி பள்ளியில் நடந்த முகாமில் தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர். முகாமில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக எளிதான முறையில் கற்பித்தல், கற்றல் மேம்பாட்டு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ரமேஷ்குமார், ஆனந்தம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட பொறுப்பாளர் பெஞ்சமின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.