< Back
மாநில செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு  பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
8 Jun 2022 7:03 PM GMT

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பழனிவேல்ராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். கொேரானா ஊரடங்கு காலத்தில் கற்றலில் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் அடிப்படை திறன்களை வளர்க்கும் வகையில் இப்பயிற்சி வழங்கப்பட்டது. இதனை இணை இயக்குனர் ராமசாமி, கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்து கூறினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் செந்தில்குமாரி, மீனா, பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்