< Back
மாநில செய்திகள்
காவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பு 22-ந் தேதி தொடக்கம்
திருவாரூர்
மாநில செய்திகள்

காவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பு 22-ந் தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
19 July 2022 6:25 PM GMT

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பு வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பு வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3,552 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்விற்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதள முகவரி www.tnusrb.tn.gov.in என்பதாகும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கடைசி நாளாகும்.

பயிற்சி வகுப்பு

இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்