< Back
மாநில செய்திகள்
செம்மறி ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்
கரூர்
மாநில செய்திகள்

செம்மறி ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்

தினத்தந்தி
|
25 May 2022 7:00 PM GMT

செம்மறி ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது.

நொய்யல்,

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி முகாம் மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் செம்மறி ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. செம்மறி ஆடுகள் வளர்ப்பு, கொட்டகை அமைப்பு, சரியான ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக வரும் 31-ந்தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்கு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மையத்தின் பேராசிரியரும், தலைவருமான அருணாசலம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்