< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
18 Nov 2022 6:45 PM GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

எஸ்.புதூர்,

வா.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 தொழிற்கல்வி மாணவ, மாணவிகளுக்கு வங்கி சார்ந்த உள்ளுரை பயிற்சி முகாம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எஸ்.புதூர் கிளையில் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற பயிற்சியை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை வங்கி கிளை மேலாளர் ஜான் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா, தொழிற்கல்வி ஆசிரியர் ராஜா, தொழிற்கல்வி பயிற்றுநர் விஜய லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்