< Back
மாநில செய்திகள்
மின்விசிறியை பழுதுபார்த்தபோது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
கரூர்
மாநில செய்திகள்

மின்விசிறியை பழுதுபார்த்தபோது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
18 July 2023 6:30 PM GMT

மின்விசிறியை பழுதுபார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம் தோவானை அருகே வீரன்குளம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (38). இவர்களுக்கு கணேஷ் (15) என்ற மகன் உள்ளார். இவர்கள் தற்போது கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

ஜெயலட்சுமி சமையல் வேலைக்காக வெளியூர்களுக்கு சென்றுவிட்டு மாதத்தில் இருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம். பரசுராமன் காகித ஆலை கேண்டீன் மற்றும் உள்ளூர் பகுதிகளில் வேலை செய்து வந்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து பலி

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்த மின்விசிறியை பரசுராமன் சரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பரசுராமனை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பரசுராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்