< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்- மின் கம்பத்தில் மோதி எலக்ட்ரீசியன் பலி
மதுரை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்- மின் கம்பத்தில் மோதி எலக்ட்ரீசியன் பலி

தினத்தந்தி
|
8 April 2023 8:36 PM GMT

மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின் கம்பத்தில் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் ரமேஷ்(வயது 25). இவரும், வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(21) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்தனர்.

தென்கரை சின்ன ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது அங்குள்ள மின் கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரமேஷ் இறந்தார். இவருடன் வந்த சூர்யா படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்