< Back
மாநில செய்திகள்
திருமண நிகழ்ச்சியில் பரிதாபம்: லுங்கியில் தீ பரவி சமையல் தொழிலாளி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பரிதாபம்: லுங்கியில் தீ பரவி சமையல் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
10 Aug 2023 7:04 PM GMT

திருமண நிகழ்ச்சியின்போது லுங்கியில் தீ பரவி சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள லெப்பைக்குடிக்காடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருமணஞ்சேரியை சேர்ந்த மக்புல் பாஷா (வயது 45) என்பவர் சமையல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த லுங்கியில் தீபரவியது. இதில் உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மக்புல் பாஷா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்