< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வாகன நெரிசல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வாகன நெரிசல்

தினத்தந்தி
|
28 Nov 2022 10:11 AM GMT

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மலைக்கோவிலுக்கு வெளியூர்களிருந்து வந்த சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நெரிசலில் சிக்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர்.

குறைந்த அளவில் போலீசார்

பாதுகாப்பு பணியில் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். இதனால் பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதேபோல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மேலும் செய்திகள்