< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் திடீர் போக்குவரத்து நெரிசல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் திடீர் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
24 July 2022 2:44 PM GMT

கோவில்பட்டியில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று 40 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் வாகனங்களிலும், நடந்தும் கோவில்பட்டி மெயின் ரோட்டிற்கும், பஸ் நிலையம் செல்வதற்கு வந்தார்கள்.

இதுபோக பொதுமக்கள் கடைகளுக்கும் வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் செய்திகள்