< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்..!
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்..!

தினத்தந்தி
|
16 Jun 2023 2:41 PM GMT

சென்னை மெட்ரோ ரெயில் பகுதி 5-ஆக போரூர் முதல் கத்திப்பாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

ஆவடி,

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

சென்னை மெட்ரோ ரெயில் பகுதி 5- ஆக போரூர் முதல் கத்திப்பாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மௌன்ட் - பூந்தமல்லி சாலை முகலிவாக்கத்தில் பணிகள் மேற்கொண்டு நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வருகின்ற 17.06.2023 முதல் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கீழ்கண்டவாறு போக்குவரத்து காவல்துறை சார்பாக அனுமதி வழங்கப்படுகிறது.

ஜூன் 17 -ந் தேதி இரவு 11 மணி முதல் 19-ந் தேதி காலை 5 மணி வரை, 24-ந் தேதி இரவு 11 முதல் 26 -ந் தேதி காலை 5 மணி வரை, ஜூலை 1-ந் தேதி இரவு 11 மணி முதல் 3-ந் தேதி காலை 5 மணி வரை, 8-ந் தேதி இரவு 11 மணி முதல் 10-ந் தேதி காலை 5 மணி வரை, 15-ந் தேதி இரவு 11 மணி முதல் 17-ந் தேதி காலை 5 மணி வரை, 22-ந் தேதி இரவு 11 மணி முதல் 24-ந் தேதி காலை 5 மணி வரை மேற்கண்ட தினங்களில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை வழியாக சென்னை புறவழிச் சாலை மூலம் அவர்களது இலக்கை சென்று அடையவும்.

சமயபுரம் அனைத்து வணிக வாகனங்களும் சாலை வழியாக போரூர் நோக்கி செல்லும் மற்றும் கனரக வாகனங்களும் போரூர் சந்திப்பில் மாற்றுப் பாதையில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.

குன்றத்தூரில் இருந்து போரூர் சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) மாற்றுப்பாதையில் போரூர் சந்திப்பில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

சென்னை கத்திபாராவிலிருந்து போரூர் மற்றும் பூந்தமல்லி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ( அரசு பேருந்துகள் தவிர்த்து ) மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் இவ்வாகனங்களை உள்வட்ட சாலையில் கோயம்பேடு வழியாக இயக்குவதற்கு சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்