< Back
மாநில செய்திகள்
விருதுநகர் ெரயில்நிலையத்தில் வியாபாரி திடீர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் ெரயில்நிலையத்தில் வியாபாரி திடீர் சாவு

தினத்தந்தி
|
6 Sep 2023 8:26 PM GMT

விருதுநகரில் ரெயில்நிலைத்தில் வியாபாரி திடீரென இறந்தார்.


விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 60). மிளகு வியாபாரியான இவர் விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு நாகர்கோவில் கோவை ெரயிலில் தனது மனைவியை வழியனுப்பி வைப்பதற்காக சென்றார். அப்போது அவர் திடீரென நடைமேடையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்