< Back
மாநில செய்திகள்
மொபட் மீது டிராக்டர் மோதி 3 பேர் காயம்
கரூர்
மாநில செய்திகள்

மொபட் மீது டிராக்டர் மோதி 3 பேர் காயம்

தினத்தந்தி
|
5 Jan 2023 6:30 PM GMT

மொபட் மீது டிராக்டர் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.

குளித்தலை அருகே உள்ள மேல்நங்கவரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35). இவர் மொபட் ஒன்றில் குளித்தலை தெற்கு தேவதானம் பகுதியை சேர்ந்த தேவிகா (29), ஆரோக்கியமேரி (32) ஆகிய 2 பேரையும் அழைத்துக் கொண்டு மருதூர் வழியாக சென்று கொண்டிருந்தார். மருதூர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் வந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்