< Back
மாநில செய்திகள்
சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
4 July 2022 7:56 PM GMT

காரியாபட்டி அருகே சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இடிந்த கோவில்

காரியாபட்டி தாலுகா புல்லூர் கிராமத்தில் பழமையான இடிந்த கோவில் ஒன்று இருப்பதாக உள்ளூரை சேர்ந்த போஸ், வீரா, மாரீஸ்வரன் கொடுத்த தகவலின் படி பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மதுரை அருண் சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கூறியதாவது:- புல்லூர் கிராமத்தில் ஆய்வு செய்ததில் மொத்தம் 9 துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. அனைத்தும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. 2 அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது.

ஆடுகள் தானம்

புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர் என்று இக்கல்வெட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இது ஒரு சமண பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது என்றும், இக்கோவிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்பதையும் நாம் அறிய முடிகிறது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கெறிக்க ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதும் இக்கல்வெட்டுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

பாண்டிய நாட்டில் சமண மதம் மிக சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமண பள்ளியே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

மேலும் செய்திகள்