< Back
மாநில செய்திகள்
ஆஸ்கருக்கு பிறகு முதுமலைக்கு ஓடோடி வரும் சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

ஆஸ்கருக்கு பிறகு முதுமலைக்கு ஓடோடி வரும் சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
1 May 2023 5:47 PM GMT

முதுமலை காப்பகத்தில், யானைகளைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், முதுமலையில் ரகு, பொம்மி என இரு குட்டி யானைகளை பராமரித்து வரும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்த ஆவணப்படம், அண்மையில் ஆஸ்கர் வென்றது.

இதைத் தொடர்ந்து, முதுமலையில் யானைகளைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலையில் யானைகளுக்கு உணவு வழங்கும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்திருப்பதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்