< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தினத்தந்தி
|
25 Oct 2022 6:45 PM GMT

தீபாவளி விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தீபாவளி விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.

அதே போல் தீபாவளி விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு நேற்று அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வர தொடங்கினார்கள். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரிய உதயமான காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

கூட்டம் அலைமோதல்

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விட்டு, பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்தனர். இதற்காக அவர்கள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்்து இருக்க வேண்டியது இருந்தது.

அதன்பிறகு காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட்டனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

பாதுகாப்பு

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்