< Back
மாநில செய்திகள்
தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை

தினத்தந்தி
|
28 Aug 2023 8:45 PM GMT

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

தக்காளி

கிணத்துக்கடவில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தில் விளையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பறித்து வந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவில் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் சரிவர பருவமழை பெய்யாததால் தக்காளி வரத்து குறைந்துவிட்டது. செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும்தான் தக்காளி வருகிறது.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 30 டன் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் ஒரு கிலோ தக்காளி ரூ.18-க்கு ஏலம் போனது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்து, தற்போது இந்த விலைக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளிரூ.29-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வரத்து அதிகரிப்பு

இந்த விலை வீழ்ச்சி குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.


மேலும் செய்திகள்