< Back
மாநில செய்திகள்
தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
3 Sep 2022 11:57 AM GMT

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர் மழை எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 90 வாகனங்களில் வரும் தக்காளி தற்போது 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.இதனால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்