< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
6 Jan 2023 7:25 PM GMT

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாணத்திரையன்பட்டிணம் கென்னடியர் தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் பிரசாத் (வயது 34) என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரசாத்தை கைது செய்து, கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்