< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
8 Oct 2023 7:30 PM GMT

புதுஆயக்குடி பகுதியில் புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆயக்குடி போலீசார் நேற்று புதுஆயக்குடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சாகுல் ஹமீது (வயது 45) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாகுல்ஹமீதை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்