< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தேனி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
13 Aug 2023 6:45 PM GMT

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்கரை திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரரான பிரேம்குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்