< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ஆலங்குளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்த வாலிபருக்கு20 ஆண்டு சிறை தண்டனை
|6 Oct 2023 7:45 PM GMT
ஆலங்குளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் மதன் (வயது 24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை, நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி அன்புச்செல்வி வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மதனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.