< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
23 Jan 2023 7:57 AM GMT

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் பணியாற்றிவரும் 1660 சிறப்பு பயிற்றுனர்கள் பணி நிலைப்பு கோரி சென்னையில் இன்று காலை முதல் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை பா.ம.க. ஆதரிக்கிறது.

1998 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்கள், பணி நிலைப்பு கோரி கடந்த 15 ஆண்டுகளில் 8 முறை உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுனர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்