< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
10 Oct 2022 8:24 PM GMT

தஞ்சையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது என மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது என மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிற்சி வகுப்பு

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் கூட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு, 2-ம் நிலை காவலர் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.யின் சர்வேயர் மற்றும் டிராப்ஸ்மேன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரம் (சி.ஜி.எல்.) ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்விற்கான தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியாக உள்ளன. எனவே முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதன்மை எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

பதிவு செய்ய வேண்டும்

இந்த பயிற்சி வகுப்பினை சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு 7 அலகுத்தேர்வுகளும். 3 முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு, அதற்கான மதிப்பீட்டு வகுப்புகளும் நடத்தப்படும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) தேர்விற்கான எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு முடிந்து, அதன் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நேர்முக தேர்விற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேர்முக தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாதிரி நேர்முகத்தேர்வு வருகிற 13-ந் தேதி இலவசமாக நடக்கிறது.

இந்த நேர்முகத்தேர்வானது போலீஸ் துறை மற்றும் இதர துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு நடக்கிறது. மேற்கண்ட தேர்விற்கு தயாராகும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் பதிவெண்ணை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அல்லது 04362-237037 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். எனவே இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்