< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் மேலும்  534 பேருக்கு கொரோனா
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 534 பேருக்கு கொரோனா

தினத்தந்தி
|
27 Aug 2022 4:23 PM GMT

தமிழகத்தில் மேலும் 534- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 323 ஆண்கள், 211 பெண்கள் என மொத்தம் 534 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 87 பேர், கோவையில் 74 பேர், சேலத்தில் 44 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 21 மாவட்டங்களில் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது. பெரம்பலூரில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 48 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 75 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 416 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 339 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்