< Back
மாநில செய்திகள்
திருவாரூர் சுக்கானாறு, பி சேனல்1 வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூர் சுக்கானாறு, 'பி சேனல்1' வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யப்படுமா?

தினத்தந்தி
|
19 March 2023 6:45 PM GMT

திருவாரூர் சுக்கானாறு, பி சேனல் வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கொரடாச்சேரி:

திருவாரூர் சுக்கானாறு, பி சேனல் வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேட்டூா் அணை நீர் இருப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தை பொறுத்த அளவு 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் உள்ளதால் குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கோடை காலத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகாயத்தாமரை செடிகள்

குறிப்பாக திருவாரூர் நகர் வழியாக செல்லும் சுக்கானாறு, கேக்கரை பி சேனல் வாய்க்கால் ஆகியவை மூலம் அருகில் உள்ள கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுக்கானாறு முழுவதும் ஆகாய தாமரை மண்டி கிடைக்கிறது இதனால் தண்ணீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது. எனவே ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்றி தர வேண்டும். கேக்கரை பி சேனல் வாய்க்கால் முழுவதும் கழிவுநீர் கலப்பதால் பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வாய்க்காலில் புதா்கள் மண்டி பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதிகாரிகள்- விவசாயிகள் குழு

எனவே பி சேனல் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி தர வேண்டும். இதைப்போல கிராமங்களில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர்வார வேண்டும். தமிழக அரசு தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு அதிக அளவில் செய்ய வேண்டும்.

மேலும் தூர்வாரும் பணிக்கு என விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்