< Back
மாநில செய்திகள்
டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு - பெண் படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு - பெண் படுகாயம்

தினத்தந்தி
|
22 May 2022 7:38 AM GMT

செங்குன்றம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயமடைந்த பெண் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தன். இவருடைய மகன் தமிழன் (வயது 22). இவர், வடகரையிலுள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இவர், தன்னுடைய பெண் நண்பரான தீபிகா உடன் மீஞ்சூர்-வண்டலூர் புறவழிசாலையில் செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி பேசிகொண்டிருந்தார்.

அப்போது மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த டிப்பர் லாரி, இவர்கள் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தீபிகா, ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான உமேஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்