< Back
மாநில செய்திகள்
தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி

தினத்தந்தி
|
14 July 2022 6:36 PM GMT

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு பயிலும் 8,335 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் 5 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மொத்தம் 17,583 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரணஜென்னி ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மேற்கண்ட மாணவ-மாணவிகள் தவிர்க்காமல் அவசியமாக போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்