< Back
மாநில செய்திகள்
வீட்டை சேதப்படுத்தி மிரட்டல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வீட்டை சேதப்படுத்தி மிரட்டல்

தினத்தந்தி
|
20 Dec 2022 6:45 PM GMT

நிலப்பிரச்சினையில் வீட்டை சேதப்படுத்தி மிரட்டல் அண்ணன், தம்பி உள்பட 4 பேர் மீது வழக்கு

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 46). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் சீனுவாசன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து பிரச்சினைக்குரிய நிலத்தில் பெருமாள் வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சீனுவாசன் உள்பட 3 பேர் பெருமாள் புதிதாக கட்டி வரும் வீட்டை கடப்பாரையால் இடித்து சேதப்படுத்தி அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாாின் பேரில் சீனுவாசன், ஏழுமலை மகன்கள் சிவக்குமார், ராஜதுரை, ரத்தினம் மகன் கோபி ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்